இந்த ஆன்மீக பதிவில் (கோளறு பதிகம் விளக்கம்) – Kolaru Pathigam Tamil Lyrics with Meaning பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கோளறு பதிகம் விளக்கம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி

சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்:

இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது.

============

கோளறு பதிகம் இரண்டாம் பாடல் வரிகள்

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க

எருதேறி யேழையுடனே

பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும்

உடனாய நாள்க ளவைதாம்

அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்:

அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும்.

============

கோளறு பதிகம் மூன்றாம் பாடல் வரிகள்

உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து

உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்

உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையதூர்தி செயமாது பூமி

திசை தெய்வ மான பலவும்

அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்:

திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். குற்றமற்ற செல்வமும் வந்து எய்தும்.

============

கோளறு பதிகம் நான்காம் பாடல் வரிகள்

மதிநுதல் மங்கையோடு வடவாலி ருந்து

மறையோதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்

உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்

கொடுநோய்க ளான பலவும்

அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்:

சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.

============

கோளறு பதிகம் ஐந்து பாடல் வரிகள்

நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்

விடையேறு நங்கள் பரமன்

துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்

மிகையான பூத மவையும்

அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்:

கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது.

============

கோளறு பதிகம் ஆறாம் பாடல் வரிகள்

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர்

மடவாள் தனோடு முடனாய்

நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

கோளரி யுழுவையோடு கொலையானை கேழல்

கொடுநாக மோடு கரடி

ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்:

சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும்.

============

கோளறு பதிகம் ஏழாம் பாடல் வரிகள்

செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக

விடையேறு செல்வ னடைவார்

ஒப்பிள மதியும்அப்பும் முடிமே லணிந்தென்

உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்

வினையான வந்து நலியா

அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்:

வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.

============

கோளறு பதிகம் எட்டாம் பாடல் வரிகள்

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து

மடவாள் தனோடும் உடனாய்

வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்

உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும்

இடரான வந்து நலியா

ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்:

கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும்.

============

கோளறு பதிகம் ஒன்பதாம் பாடல் வரிகள்

பலபல வேடமாகும் பரனாரி பாகன்

பசுவேறும் எங்கள் பரமன்

சலமக ளோடெருக்கும் முடிமே லணிந்தென்

உளமே புகுந்த அதனால்

மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்

வருகால மான பலவும்

அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்:

நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும் நன்மையே விளைவிக்கும்.

============

கோளறு பதிகம் பத்தாம் பாடல் வரிகள்

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு

குணமாய வேட விகிர்தன்

மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்

உளமே புகுந்த அதனால்

புத்தரொ டமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்

திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்:

புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான பெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.

============

கோளறு பதிகம் பதினோராம் பாடல் வரிகள்

தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல்துன்னி

வளர்செம்பொன் எங்கும் நிகழ

நான்முகன் ஆதியாய பிரமா புரத்து

மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து

நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்

அரசாள்வர் ஆணை நமதே.

பொருள்:

இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.

—————- திருச்சிற்றம்பலம் ————-

============

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை சனிப் பெயர்ச்சி நடந்தேறும். சனி கிரகத்தின் அதிதேவதை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதை பெயர்ச்சி என்று சோதிட சாத்திரங்கள் குறிக்கிறது. ராசிகள் மொத்தம் 12.

கோடிப் பிறவிகளில் ஒரு ஆன்மா சேர்த்து வந்துள்ள நல்வினை; தீவினைக் குவியல் ‘சஞ்சித வினை’ என்று அழைக்கப்படும். அக்குவியலில் இருந்து ஒரு சிறு பகுதியை அனுபவித்து முடிக்க ஒரு ஆன்மா பிறவி எடுக்கிறது. இது ‘பிராரப்த வினை’.

கிரகங்கள் துன்பங்களையோ இன்பங்களையோ புதிதாக உற்பத்தி செய்து வழங்குவதில்லை. துன்பமோ இன்பமோ பிராரப்த வினையின் பலனாகவே ஒவ்வொரு ஆன்மாவையும் வந்து சேர்ந்து செயல்படும் .

ஒரு கிரகம் சாதகமான இடத்தில் பெயர்ச்சியுற்றால் பிராரப்த வினையில் உள்ள நல்வினைப் பலன்கள் மிகுதியாகவும், பாதகமான இடத்தில் பெயர்ந்தால் அதே பிராரப்தத்தின் தீவினைப் பலன்கள் மிகுதியாகவும் அந்தந்த ராசியினரை வந்துச் சேரும். கிரகங்கள் ஒவ்வொருவரின் வினைகளையும் உரிய நேரத்தில் சேர்ப்பிக்கும் அஞ்சல் நிலைய அதிகாரிகள். நம் தீவினைகளே நமக்கு துன்பத்தை ஊட்டுகின்றன; கிரகங்கள் அல்ல என்ற புரிதல் மிக மிக அவசியம்.

ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை அனுதினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகத்தை சர்வ நிச்சயமாய் குறைத்துக் கொள்ள முடியும்.

(kolaru pathigam tamil lyrics meaning) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, பிரதோஷ பாடல் வரிகள், பிரதோஷ பூஜை, Pradosham songs lyrics in tamil, பிரதோஷ கால மந்திரம், Pradosham Sivan Song. You can also save this post கோளறு பதிகம் விளக்கம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment