இந்த ஆன்மீக பதிவில் (Sabarimalayil vanna Chandrodayam | சபரிமலையில் வண்ண சந்திரோதயம்) – Sabarimalayil vanna Chandrodayam பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… Sabarimalayil vanna Chandrodayam | சபரிமலையில் வண்ண சந்திரோதயம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

சபரிமலையில் வண்ண சந்திரோதயம் தர்ம சாஸ்தாவின் சந்நிதியில் சுவாமி ஐயப்பன் பாடல் வரிகள். Sabarimalayil vanna Chandrodayam dharma sasthave sannidhiyil Swami Ayyappan Devotional songs Tamil Lyrics

============

சபரிமலையில் வண்ண சந்திரோதயம் தர்ம

சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம்

கோடிக்கண் தேடிவரும் ஐயப்பனை…நாமும்

கும்பிட்டுப் பாடுகின்றோம் என்னப்பனை (சபரி)

பாலெனச் சொல்லுவதும் உடலாகும் – அதில்

தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும்

வெண்ணெய் திரண்டதுந்தன் அருளாகும்…. இந்த

நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும்

ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…இந்த

ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும்

ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி)

வாசமுடைய பன்னீர் அபிஷேகம்… எங்கள்

மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம் – அதில்

இனிய பஞ்சாமிர்தத்தின் அபிஷேகம்

இன்பத்தைக் கூட்டுதய்யா உன் தேகம்

ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா – இந்த

ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா ஐயப்பா

ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி)

உள்ளத்தின் வெண்மைதன்னைக் கையிலெடுத்து – அதில்

உன் பெயரைக் குழைத்து நெற்றியிலிட்டு

உருகும் விபூதியினால் அபிஷேகம்…ஹரி

ஓம்மென்று சந்தனத்தில் அபிஷேகம்

ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா – இந்த

ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா

ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி)

(sabarimalayil vanna chandrodayam) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள். You can also save this post Sabarimalayil vanna Chandrodayam | சபரிமலையில் வண்ண சந்திரோதயம் or bookmark it. Share it with your friends…

Leave a Comment