இந்த ஆன்மீக பதிவில் (அங்காளம்மா எங்கள் செங்காளம்மா) – Angalamma Engal Sengalamma – LR Iswari Amman Devotional songs பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… அங்காளம்மா எங்கள் செங்காளம்மா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

அங்காளம்மா எங்கள் செங்காளம்மா

மங்களம் பொங்க மனதில் வந்திடும்

மாரியம்மா கரு மாரியம்மா

சிங்காரி ஒய்யாரி செம்பவளக் கருமாரி

சிங்கத்தின் மீதேறி பவனி வரும் ஓங்காரி

மஞ்சளிலே நீராடி நெஞ்கினிலே உறவாடி

தஞ்சமென்று வந்தோமடி கெஞ்சுகிறோம் உன்னையடி (அங்காளம்மா )

நாகத்தில் யீமர்ந்து காட்சி தரும் அலங்காரம்

நாயகியே உன்னைக் கண்டால் நாவில் வரும் ஓங்காரம்

பாசமெனும் மலரெடுத்து ஆசையுடன் மாலை தொடுத்து

நேசமுடன் சூட்ட வந்தோம் மாசில்லாத மாரியம்மா (அங்காளம்மா )

தென் பொதிகை சந்தனம் எடுத்து

மஞ்சளுடன் குங்குமம் சேர்த்து

பன்னீரும் அபிஷேகம் செய்ய வந்தோம் மாரியம்மா

அன்னையாக நீ இருந்து அருளென்னும் பாலைத் தந்து

இன்பமுடன் வாழ வைப்பாய் ஈஸ்வரியே மாரியம்மா (அங்காளம்மா )

(angalamma engal sengalamma) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, அங்காளம்மன் பாடல்கள், Angalamman Songs. You can also save this post அங்காளம்மா எங்கள் செங்காளம்மா or bookmark it. Share it with your friends…

Leave a Comment