இந்த ஆன்மீக பதிவில் (ஐயப்பா ஐயப்பா என்றுன்னைப் பாடி) – Ayyappa Ayyappa Entrunai Paadi பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஐயப்பா ஐயப்பா என்றுன்னைப் பாடி ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஐயப்பா ஐயப்பா என்றுன்னைப் பாடி அனுதினம் தொழுவோம் அனைவரும் கூடி – ஐயப்பன் பாடல் வரிகள். Ayyappa Ayyappa Entrunai Paadi anudhinam thozhuvom- Ayyappan Devotional songs Tamil Lyrics

============

ஐயப்பா ஐயப்பா என்றுன்னைப் பாடி

அனுதினம் தொழுவோம் அனைவரும் கூடி

மெய்யப்பா மெய்யப்பா என்றுன்னை நாடி

மெய்ப்பொருள் கண்டோம் ஆயிரம் கோடி!

அம்மையே இல்லாமல் தோன்றிடும் விந்தை

அவனியில் யாரும் கண்டதே இல்லை

இம்மையும் மறுமையும் வியந்திடும் வண்ணம்

இறைவா நீதான் பிறந்தாயே!

மாயவன் ஈசன் அன்பின் உறவால்

மலையில் மலர்ந்த அதிசயமலர் நீ

காலையில் தோன்றும் இளங்கதிர் நீயே

கற்பகத்தருவே கரங்குவித்தோம்!

நினைத்தால் நெஞ்சம் இனித்திடும் தேவா

நீதியைக் காக்கும் நிர்மல சீலா

நான் நீ என்ற அகந்தையை மாய்த்து

நீ நான் ஒன்றே என்றாய் இறைவா!

ஆதியந்தமும் இல்லாத ஈசா

அனைவரைக் காக்கும் இறைவன் நீயே

வாழ்க்கை நெறியை வகுத்தவன் நீயே

வாய்மையின் பிறப்பிடம் வாழியே நீயே!

தலைவன் நீயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

இறைவன் நீயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

வரணும் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

(ayyappa ayyappa entrunai paadi) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள். You can also save this post ஐயப்பா ஐயப்பா என்றுன்னைப் பாடி or bookmark it. Share it with your friends…

Leave a Comment