இந்த ஆன்மீக பதிவில் (எங்கே மண‌க்குது சந்தனம் எங்கே மணக்குது) – Enge Manakkuthu Santhanam Enge manakkuthu பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… எங்கே மண‌க்குது சந்தனம் எங்கே மணக்குது ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

எங்கே மண‌க்குது சந்தனம் எங்கே மணக்குது ஐயப்பசுவாமி கோவிலிலே சந்தனம் ஐயப்பன் பாடல் வரிகள். Enge manakkuthu santhanam enge manakkuthu Ayyappa sami Kovilile- K. Veeramani Ayyappa song Tamil Lyrics

சாமி ஐயப்பா சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சாமி ஐயப்பா

சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே

சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே

============

எங்கே மண‌க்குது சந்தனம் எங்கே மணக்குது

ஐயப்பசுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது

என்ன‌ மணக்குது மலையில் என்ன‌ மணக்குது

இன்பமான‌ ஊதுவத்தி அங்கே மணக்குது (எங்கே மண‌க்குது)

எங்கே மண‌க்குது நெய்யும் எங்கே மணக்குது

வீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குது

திருநீறும் மண‌க்குது பன்னீரும் மண‌க்குது

ஆண்டவனின் சன்னதியில் அருளும் மண‌க்குது

ஐயப்பன்மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது (எங்கே மண‌க்குது)

பள்ளிக்கட்டைச் சுமந்துகிட்டா பக்தி பிறக்குது

அந்தப்பனிமலையில் ஏறிடவே சக்தி பிறக்குது

பகவானைப் பார்த்துவிட்டா பாவம் பறக்குது

பதினெட்டாம் படிதொட்டால் வாழ்வும் இனிக்குது (எங்கே மண‌க்குது)

பேட்டைத் துள்ளி ஆடும்போது மனமும் துள்ளுது

ஐயன் பேரழகைக் காண‌ உள்ளம் ஆசை கொள்ளுது

காட்டுக்குள்ளே சரணகோஷம் வானைப் பிளக்குது

வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டிலிருக்குது (எங்கே மண‌க்குது)

பூங்காவனத் தோப்புக்குள்ளே பவனி வருகிறான்

வேங்கையின் மேல் ஏறிவந்து வரமும் கொடுக்கிறான்

நோன்பிருந்து வருவோரைத் தாங்கி நிற்கிறான்

ஓங்கார‌ நாதத்திலே எழுந்து வருகிறான். (எங்கே மண‌க்குது)

(enge manakkuthu santhanam enge manakkuthu) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், வீரமணி ஐயப்பன் பாடல்கள். You can also save this post எங்கே மண‌க்குது சந்தனம் எங்கே மணக்குது or bookmark it. Share it with your friends…

Leave a Comment