இந்த ஆன்மீக பதிவில் (மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்) – Maadu Meikkum Kanne Nee Poga Vendam Sonnein பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன் பாடல் வரிகள் – ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல். Maadu Meikkum Kanne Nee Poga Vendam Sonnein Lyrics by Othukadu Venkata subbaiyer.

============

மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்

போக வேணும் தாயே தடை சொல்லாதே நீயே

காய்ச்சின பாலுதரேன் கல்கண்டு சீனி தரேன்

கை நிறைய வெண்ணை தரேன் வெய்யிலிலே போக வேண்டாம்

(மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம்)

காய்ச்சின பாலும் வேண்டாம் கல்கண்டு சீனி வேண்டாம்

உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்

(போக வேணும் தாயே தடை சொல்லாதே நீயே)

யமுனா நதிக்கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்

கள்வர் வந்து உன்னை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்)

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ கண்டதுண்டோ சொல்லும் அம்மா

கள்வர் வந்து என்னை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்

(போக வேணும் தாயே தடை சொல்லாதே நீயே)

கோவர்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு

கரடி புலியை கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகங்கள் எல்லாம் என்னை கண்டால் ஓடி வரும்

கூட்டம் கூட்டமாக வந்தால் வேட்டை அடி ஜெயித்திடுவேன்

(போக வேணும் தாயே தடை சொல்லாதே நீயே)

பாசமுள்ள நந்த கோபர் பாலன் எங்கே என்று கேட்டால்

என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே நி போக வேண்டாம் சொன்னே)

பாலருடன் வீதியிலே பந்துஆடுரான் என்று சொல்லேன்

தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவன்

(போக வேணும் தாயே தடை சொல்லாதே நீயே)

(maadu meikkum kanne nee poga vendam sonnein) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs, Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், Carnatic Songs. You can also save this post மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன் or bookmark it. Share it with your friends…

Leave a Comment