இந்த ஆன்மீக பதிவில் (கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு) – Gokulathil Pasukkal ellaam gopalan kuzhalai kettu song Tamil Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு நாலுபடி பால் கறக்குது இராமாரி! ‍- கண்ணன் (கிருஷ்ணன்) பாடல் வரிகள். Gokulathil Pasukkal ellaam gopalan kuzhalai kettu song Tamil Lyrics

============

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்

கோபாலன் குழலைக் கேட்டு

நாலுபடி பால் கறக்குது இராமாரி! – அந்த

மோகனின் பேரைச் சொல்லி

மூடி வைத்த பாத்திரத்தில்

மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!

(இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரி

இராமாரி அரே கிருஷ்ணாரி)

கண்ணன் அவன் நடனமிட்டு

காளிந்தியில் வென்ற பின்னால்

தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! – அவன்

கனிஇதழில் பால் கொடுத்த

பூதகியைக் கொன்ற பின்னால்

கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!

(இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரி

இராமாரி அரே கிருஷ்ணாரி)

குளத்தில் முங்கிக் குளிக்கையிலே

கோவிந்தன் பெயரைச் சொன்னால்

கழுத்திலுள்ள தாலி நிக்குது இராமாரி! – சேலை

திருத்தும் போது அவன்பெயரை

ஸ்ரீரங்கா என்று சொன்னால்

அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!

(இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரி

இராமாரி அரே கிருஷ்ணாரி)

படிப்படியாய் மலையில் ஏறி

பக்திசெய்தால் துன்பம் எல்லாம்

பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! – அட

படிப்பில்லாத ஆட்கள் கூட

பாதத்திலே போய் விழுந்தால்

வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!

(இராமாரி அரே கிருஷ்ணாரி – அரி அரி

இராமாரி அரே கிருஷ்ணாரி)

(gokulathil pasukkal ellaam) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள். You can also save this post கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு or bookmark it. Share it with your friends…

Leave a Comment