Paal Erukkum Pazham Song Lyrics song is from the movie Thozhar Pandian which was released in the year 1994 and it was sung by the singers year : 1994. The lyrics of this song Paal Erukkum Pazham Song Lyrics was written by Vaali and music composed by Ilaiyaraaja. movie : Thozhar Pandian have performed in this song.

=================
திரைப்பட நட்சத்திரம் : movie : Thozhar Pandian
திரைப்படம் : Thozhar Pandian
இசையமைப்பாளர் : Ilaiyaraaja
பாடலாசிரியர் : year : 1994
எழுத்தாளர் : Vaali
வருடம் : 1994
=================

எம்மா எம்மா
எப்பா எப்பா
எப்பா எப்பா
எம்மா எம்மா

பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே

சூடிருக்கும் சுவை இருக்கும்
சோத்துக் கூடை சுமந்து வரும்
சிட்டுக் குருவியே

பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே

சூடிருக்கும் சுவை இருக்கும்
சோத்துக் கூடை சுமந்து வரும்
சிட்டுக் குருவியே

உன் கட்டளை கேட்டுட்டு
சோத்துல மொத்தமா
கட்டி வச்சதிங்கே யாரு
அதைக் கூறு

ஆணி முத்தழைச் சின்ன
முந்தானைக்குள்ளாற
பொத்தி வச்சதிங்கே யாரு
அதைக் கூறு

எம்மா எம்மா
எப்பா எப்பா
எம்மா எம்மா
எப்பா எப்பா

பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே

முப்பத்தஞ்சு வயசு வந்தும்
முத்தங்கள கொடுத்ததில்லே
முத்தமிடும் காட்சிகள
படத்துல பாத்தோம்

எப்போ அந்த பாக்கியம்தான்
எங்களுக்கு கிடைக்குமின்னு
நம்ம ஊரு சோசியன
அடிக்கடி கேட்டோம்

மத்து போல ஏண்டியம்மா
எங்கள நீ கடையிற
வண்டு போல மாறி வந்து
மனச எல்லாம் கொடையிற

இத்தனை நாள் தூங்க வெச்ச
ஆசைய நீ எழுப்புற
கற்புடைய ஆம்பளைங்க
எங்கள ஏன் கெடுக்குற

சிக்கென நிக்கிறியே
ஆள சொக்கிட வெக்கிறியே
எம்மாடி எப்பாடி
என்னான்னு சொல்லுவோம்
என்னாவோ பண்ணுறியே

பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே

சூடிருக்கும் சுவை இருக்கும்
சோத்துக் கூடை சுமந்து வரும்
சிட்டுக் குருவியே

நாயர் கடை இட்லிதான்
ஆடை கட்டி வந்ததுன்னு
கை இரண்ட துடிக்கிறத
புட்டுப் புட்டுத் தின்ன

மொச்சக் கொட்ட மீன் கொழம்பு
கச்ச கட்டி வந்ததுன்னு
எச்சில் இங்க சொரக்கிறதா
தொட்டுத் தொட்டுத் தின்ன

உன்னுடைய சேலைகள
துவைச்சு இங்கு போடுறோம்
உன்னப் பத்தி பாட்டெழுதி
தெருத் தெருவா பாடுறோம்

என்னை தொனைக்கு
வரிசை நிக்குதையா ரோட்டுல
உங்க நெஞ்சமே வேகுறதா
என்னுடைய ஹீட்டுல

அற்புதச் சித்திரமே
நாங்க எப்பவும் கொத்தடிமை
முன்புறம் பின்புறம்
பொன்னென மின்னுற
சந்தனப் பாற்குடமே

பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே

சூடிருக்கும் சுவை இருக்கும்
சோத்துக் கூடை சுமந்து வரும்
சிட்டுக் குருவியே

உன் கட்டளை கேட்டுட்டு
சோத்துல மொத்தமா
கட்டி வச்சதிங்கே யாரு
அதைக் கூறு

ஆணி முத்தழைச் சின்ன
முந்தானைக்குள்ளாற
பொத்தி வச்சதிங்கே யாரு
அதைக் கூறு

பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே

சூடிருக்கும் சுவை இருக்கும்
சோத்துக் கூடை சுமந்து வரும்
சிட்டுக் குருவியே

Leave a Comment