இந்த ஆன்மீக பதிவில் (அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்) – All Krishna Songs பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் – நம் அழகன் வந்தானென்று , ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் கண்ணன் பாட்டு மற்றும் பாடல் வரிகள். Asainthadum mayil ontru kandal- Kannan/ Sree Krishna Songs by Othukadu Venkatasubbiyer song Lyrics

ராகம் : ஸிம்ஹேந்த்ரமத்யமம் தாளம் : ஆதி

============

பல்லவி

அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் – நம் –

அழகன் வந்தானென்று – சொல்வதுபோல் தோணும்! (அசைந்தாடும்)

அனுபல்லவி

இசையாரும் குழல் கொண்டு வந்தான் – இந்த –

ஏழேழ் பிறவிக்கும் இன்பநிலை தந்தான்

திசைதோறும் நிறைவாக என்றான் – என்றும் –

திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்

மத்யமகாலம்

எங்காகிலும் – எமதிறைவா! இறைவா! எனும் மனநிறை அடியவரிடம்

தங்கு மனத்துடையான்! – அருள் பொங்கும் முகத்துடையான்! – ஒரு –

– பதம் வைத்து மறு பதம்தூக்கி – நின்றாட – மயிலின் இறகாட – மகர குழையாட

– மதிவதனமாட – மயக்கு விழியாட – மலரணிகளாட – மலர்மகளும் – பா…ட –

இது “கனவோ நனவோ!” – என – மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட –

(அசைந்தாடும் மயில்)

சரணம்

அசைபோடும் ஆவினங்கள் கண்டு – இந்த –

அதிசயத்தே சிலைபோலே நின்றதுவும் உண்டு

நிசமானசுகம் என்று ஒன்று – இருந்தால்

நீளுலகில் இதையன்றி – வேறெதுவும் அன்று!

இசையாரும் கோபாலன் இன்று – நின்று –

எழுந்தெழுந்து நடம்ஆட – எதிர்நின்று ராதைபாட -,

எங்………………………………….. கொண்டாட (அ)

(asainthadum mayil ontru kandal) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Hare Krishna songs, கண்ணன் பாடல்கள், ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல்கள், Othukadu Venkata subbaiyer Songs. You can also save this post அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் or bookmark it. Share it with your friends…

Leave a Comment