Categories: Devotional Songs

காமாட்சி துக்க நிவாரண அஷ்டகம் | dhukka nivarana ashtakam stotram lyrics

இந்த ஆன்மீக பதிவில் (காமாட்சி துக்க நிவாரண அஷ்டகம்) – Kamatchi Dhukka Nivarana Ashtakam Stotram Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… காமாட்சி துக்க நிவாரண அஷ்டகம் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

============

துக்க நிவாரண அஷ்டகம்

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே

சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே

கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி

கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்

தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்

மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே

பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே

எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்

கணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்

பணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே

கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே

சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே

பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்

கண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

இடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்

சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்

படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி

ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி

ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி

ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி

ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.

துக்க நிவாரண அஷ்டகம் முற்றிற்று!

‘மங்கள ரூபிணி’ என்பது காமாக்ஷி தேவியைப் போற்றும் பிரபலமான‌ ‘துக்க நிவாரண அஷ்டகம்’ என்று அழைக்கப்படும் ஒரு தமிழ் பாமாலை ஆகும். காமாக்ஷி தேவியின் அருளைப் பெறவும், மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறவும், இந்த ஸ்லோகத்தை தினமும் வீட்டில் பாராயணம் செய்வது நல்லது. ‘துக்க நிவாரணம்’ என்றால் எல்லாவிதமான கவலைகளையும் நீக்கி மன அமைதியைத் தரும்.

============

காமாட்சி அம்மன் துக்க நிவாரண அஷ்டகம் யாருக்கு தேவைப்படும் | Kamatchi Dhukka Nivarana Ashtakam Benefits

============

துக்க நிவாரண அஷ்டகம் பலன்

காஞ்சியில் கோவில் கொண்டிருக்கும் ஸ்ரீ காமாட்சியம்மனை போற்றி இயற்றப்பட்ட துக்க நிவாரண அஷ்டகம் இது இந்த அஷ்டகத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டு பூஜையறையில் இருக்கும் காஞ்சி காமாட்சியம்மன் படத்திற்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, மனமொன்றி இந்த அஷ்டகத்தை படிப்பதால் உங்களை பாடாய்படுத்தும் அனைத்து துன்பங்களும் நீங்கும். வீட்டின் தரித்திர நிலை மாரி, செல்வ சேகரம் ஏற்படும். குடும்பத்தினர் நலம் பெறுவார்கள். நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் இருந்த தடை தாமதங்கள் விலகி செய்யும் செயல்கள் சிறப்பான வெற்றிகளை அடையும்.

அதிகளவு துன்பங்கள் சமயங்களில் அவர்களின் மன உறுதியை மனக்கவலைகளை அதிகரிப்பதோடு, எதிலும் முழுமையான ஈடுபாடு கொண்டு செயல்படமுடியாமல் செய்து வாழ்வில் மேலும் கஷ்டங்களை அதிகப்படுத்துகிறது. இவற்றையெல்லம் போக்கும் சிறப்பான மந்திரமாக “ஸ்ரீ காமாட்சி அம்மன் துக்க நிவாரண அஷ்டகம்” இருக்கிறது.

(dhukka nivarana ashtakam stotram lyrics) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Kamatchi Amman songs, காமாட்சி அம்மன் பாடல்கள், Stotram, Ashtakam. You can also save this post காமாட்சி துக்க நிவாரண அஷ்டகம் or bookmark it. Share it with your friends…

Share
Tags: Amman Songs

Recent Posts

Pachai Mayil Vaahanane Lyrics in Tamil | பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள்

Pachai Mayil Vaahanane Lyrics Tamil பச்சை மயில் வாகனனே பாடல் வரிகள் (Pachai Mayil vaahananae) இந்த பதிவில்…

4 months ago

வா ரயில் விட போலாமா | Vaa Rayil Vida Polaama Song Lyrics in Tamil

Vaa Rayil Vida Polaama Song Lyrics In Tamil Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

4 months ago

Vaa Rayil Vida Polaama Song Lyrics from Pariyerum Perumal

Vaa Rayil Vida Polaama Song Lyrics In English Vaa Rayil Vida Polaama Song Lyrics is…

5 months ago

மகா சிவராத்திரிக்கு சிவனடியார் வழிபாடு

மகா சிவராத்திரி சிறப்பு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை…

5 months ago

சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல் | tamil pathikams to be recited all four seasons throughout shivaratri day

இந்த ஆன்மீக பதிவில் (சிவராத்திரி நாள் முழுவதும் நான்கு காலங்களிலும் ஓத வேண்டிய திருப்பதிகங்களின் பட்டியல்) - List of…

5 months ago

முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள் | Mudhal nee mudivum nee lyrics tamil

முதல் நீ முடிவும் நீ பாடல் வரிகள் ===================== பாடலாசிரியர் : தாமரை பாடகர்கள் : சித் ஶ்ரீராம் &…

5 months ago