இந்த ஆன்மீக பதிவில் (லலிதா நவரத்தின மாலை – மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே) – Matha jaya Om Lalithambigaiye – Lalitha Navarathna Malai Song Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… லலிதா நவரத்தின மாலை – மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே: லலிதா நவரத்தின மாலை அம்மன் பக்தி பாடல் வரிகள். இந்த பாட்டு அம்மனை 9 நவரத்தினங்களாக வர்னித்து, பிறகு இந்த பாடலின் பயனையும் குறிக்கிறது. Matha jaya Om Lalithambigaiye – Lalitha Navarathna Malai Songs Tamil Lyrics

காப்பு

ஆக்கும் தொழில் ஐந்தறனாற்ற நலம்

பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்

சேர்க்கும் நவரத்தின மாலையினைக்

காக்கும் கணநாயக வாரணமே

============

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

1. வைரம்

கற்றும் தெளியார் காடேகதியாய்

கண்மூடி நெடுங்கன வானதவம்

பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்

பெருகும் பிழையேன் பேசத்தகுமோ

பற்றும் வயிரப் படைவாள் வயிரப்

பகைவர்க்கெமனாக எடுத்தவளே

வற்றாத அருட்சுனையே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

2. நீலம்

மூலக்கனலே சரணம் சரணம்

முடியா முதலே சரணம் சரணம்

கோலக்கிளியே சரணம் சரணம்

குன்றாத ஒளிக்குவையே சரணம்

நீலத்திருமேனியிலே நினைவாய்

நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்

வாலைக்குமரி வருவாய் வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

3. முத்து

முத்தேவரும் முத்தொழிலாற்றிடவே

முன்னின் றருளும் முதல்வி சரணம்

வித்தே விளைவே சரணம் சரணம்

வேதாந்த நிவாசினியே சரணம்

தத்தேறிய நான் தனயன் தாய் நீ

சாகாத வரம் தரவே வருவாய்

மத்தேறு தத்திக்கினை வாழ்வடையேன்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

4. பவளம்

அந்தி மயங்கிய வானவி தானம்

அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடை

சிந்தை நிறம் பவளம் பொழிபாரோர்

தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ

எந்தை யிடத்தும் மனத்தும் இருப்பாள்

எண்ணுபவர்க்கருள் எண்ணமிருந்தாள்

மந்திர வேத மயப் பொருளானாள்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

5. மாணிக்கம்

காணக் கிடையா கதியானவளே

கருதக் கிடையாக் கலையானவளே

பூணக்கிடையாப் பொலிவானவளே

புனையக் கிடையாப் புதுமைத்தவளே

நாணித்திரு நாமமும் நின் துதியும்

நவிலாதவரை நாடாதவளே

மாணிக்க ஒளிக்கதிரே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

6. மரகதம்

மரகத வடிவே சரணம் சரணம்

மதுரித பதமே சரணம் சரணம்

சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்

சுதிஜதிலயமே இசையே சரணம்

ஹர ஹர சிவ என்றடியவர் குழும

அவரருள் பெற அருளமுதே சரணம்

வர நவநிதியே சரணம் சரணம்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

7. கோமேதகம்

பூமேவிய நான் புரியும் செயல்கள்

பொன்றாது பயன் குன்றா வரமும்

தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்

திடமாய் அடியேன் மொழியும் திறமும்

கோமேதகமே குளிர்வான் நிலவே

குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்

மரமேருவிலே வளர் கோகிலமே

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

8. பது மராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும

ராகவிகாஸ வியாபினி அம்பா

சஞ்சல ரோக நிவாரணி வாணி

சாம்பவி சந்த்ர கலாதரி ராணி

அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி

அம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணி

மஞ்சுள மேரு சிருங்க நிவாஸினி

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

9. வைடூர்யம்

வலையொத்த வினை கலையொத்த மனம்

மருளப் பறையாரொலி யொத்த விதால்

நிலையற் றெளியேன் முடியத்தகுமோ

நிகளம் துகளாக வரம் தருவாய்

அலையற் றசைவற் றநுபூதி பெறும்

அடியார் முடிவாழ் வைடூரியமே

மலையத்துவசன் மகளே வருவாய்

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

பயன்

எவர் எத்தினமும் இசையாய் லலிதா

நவரத்தின மாலை நவின்றிடுவார்

அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்

சிவரத்தினமாய் திகழ்வா ரவரே (மாதா)

(matha jaya om lalithambigaiye lalitha navarathna malai) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, பி சுசீலா பக்தி பாடல்கள், Navarathri Special Tamil Songs Lyrics. You can also save this post லலிதா நவரத்தின மாலை – மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே or bookmark it. Share it with your friends…

Leave a Comment