இந்த ஆன்மீக பதிவில் (கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா) – Kannale Parum Ayya Pushpavanam Kuppusamy Ayyappan Song Lyrics பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா – புஷ்பவனம் குப்புசாமி ‍: அஞ்சு மலை அழகா ஐயப்பன் பக்தி பாடல் வரிகள். Kannale Paaru Maiyya Kannale Paarumaiyya – Anjumalai Azhaga Album Pushpavanam Kuppusamy Ayyappan Songs Tamil Lyrics

============

கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா

இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா

பொன்னேதும் வேணாமைய்யா பொருளேதும் வேணாமைய்யா

உன்பாதம் சேரும் அந்த‌ திருநாளே போதும் ஐயா

ஏழைப் பங்காளா எம்மை ஏற்றி விடக் கூடாதா

பக்தர்கள் நாங்கள் போடும் கோஷங்கள் கேட்காதா

சரணங்கள் கேட்காதா

சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ

சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ (கண்ணாலே பாருமைய்யா)

ஐயா உன் திருமேனி வழிகின்ற‌ நெய்யாகி

கண்டத்து மணியாகி ச‌ந்தனம் நானாகும்

அக்காலம் என்றென்று காத்திருப்பேனே

ஆவல் கொண்டு ஆண்டாண்டு மலை வந்தேனே

உருகி நின்றேனே அவ‌யம் கேட்டேனே

சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ

சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ (கண்ணாலே பாருமைய்யா)

மணிகண்டன் புகழாரம் பொழுதெல்லாம் சூடாமல்

சாஸ்தா உன் திருநாமம் வாயாரப் பாடாமல் மண் மேலே

ஒருபோதும் நான்தான் வாழ்வேனா

தடுத்தாலும் மாலை போடாமல் இருப்பேனா

உன்னை மறப்பேனா மனதில் நிறைப்பேன் நான்

சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ

சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ

கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா

இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா

பொன்னேதும் வேணாமைய்யா பொருளேதும் வேணாமைய்யா

உன்பாதம் சேரும் அந்த‌ திருநாளே போதும் ஐயா

ஏழைப் பங்காளா எம்மை ஏற்றி விடக் கூடாதா

பக்தர்கள் நாங்கள் போடும் கோஷங்கள் கேட்காதா

சரணங்கள் கேட்காதா

சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ

சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ (கண்ணாலே பாருமைய்யா)

(kannale paaru maiyya kannale paarumaiyya) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள், புஷ்பவனம் குப்புசாமி ஐயப்பன் பாடல், Pushpavanam Kuppusamy Songs. You can also save this post கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா or bookmark it. Share it with your friends…

Leave a Comment