இந்த ஆன்மீக பதிவில் (ஸ்வாமியை நம்பி அழைத்தால்) – Swamiyai nambi azhaithal swamy saranamentu ullam ninaithal பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்வாமியை நம்பி அழைத்தால் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

ஸ்வாமியை நம்பி அழைத்தால் ஸ்வாமி சரணமென்றுள்ளம் நினைத்தால்! ஐயப்பன் பாடல் வரிகள். Swamiyai nambi azhaithal swamy saranamentu ullam ninaithal – Ayyappan Devotional songs Tamil Lyrics

============

ஸ்வாமியை நம்பி அழைத்தால்

ஸ்வாமி சரணமென்றுள்ளம் நினைத்தால்

கைபிடிப்பார் என்றும் கைவிடமாட்டாரே

கலியுக வரதனய்யப்பா

ஸ்வாமி சபரிகிரீசனய்யப்பா!

ஆட்டங்கள் ஆடி அழைத்தேன்

சரணம் சொல்லியே பாதம் பிடித்தேன்!

நொந்து தெளிந்து விளங்கிய என்னில்

மணிகண்ட மாதவனொளியே

ஸ்வாமி நீயன்றி ஏது இங்கு வழியே!

வாழ்வும் தாழ்வும் கடந்தேனே

காப்பாற்று என்று விழுந்தேனே!

கர்மத்தின் ஆற்றினில் துடிக்குது என்னுயிர்

கரையினைக் காட்டிடு கண்ணால்

எந்தன் வாழ்க்கையும் ஓடுது உன்னால்!

கானலாய் காண்கின்ற உலகில்

புரியாததோர் இருள் தரும் படிகள்

தாண்டி வந்தய்யனைக் காண்கின்ற பொழுதில் ஒளி தந்த பதினெட்டு படிகள்

எந்தன் சந்ததி நற்கதி தேடும்!

ஸ்வாமியை நம்பி அழைத்தால்

ஸ்வாமி சரணமென்றுள்ளம் நினைத்தால்

கைபிடிப்பார் என்றும் கைவிடமாட்டாரே

கலியுக வரதனய்யப்பா

ஸ்வாமி சபரிகிரீசனய்யப்பா!

(swamiyai nambi azhaithal) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like Ayyappan Songs, ஐயப்பன் பாடல் வரிகள், பாடல் வரிகள். You can also save this post ஸ்வாமியை நம்பி அழைத்தால் or bookmark it. Share it with your friends…

Leave a Comment