இந்த ஆன்மீக பதிவில் (வெள்ளை தாமரை மீதமர்ந்து) – Vellai Thamarai Meethamarnthu பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… வெள்ளை தாமரை மீதமர்ந்து ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

வெள்ளை தாமரை மீதமர்ந்து எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள் ‍பி. சுசீலா பாடிய‌ சரஸ்வதி தேவி பாடல்கள் தாயே கருமாரியம்மா ஆல்பத்தில் இருந்து. Vellai Thamarai Song lyrics from album Thaye Karumari Amma sung by P.Susheela – songs Tamil Lyrics

============

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

பொங்கும் தமிழில் தேன் கவிதை

பொங்கும் தமிழில் தேன் கவிதை

தினம் பாடிட வைத்தே கேட்டிருப்பாள்

அந்த கலைமகள் என்றும் வாழ்த்துரைப்பாள்

அகரத்தில் தொடங்கும் வார்த்தைகளை

அகிலத்தில் எங்கும் அறிய வைத்தாள்

ஓசையில் உணரும் பாஷைகளை

பூமியில் என்றும் பேச வைத்தாள்

ஓம் ஓம் ஓம் ஓம்

அகரத்தில் தொடங்கும் வார்த்தைகளை

அகிலத்தில் எங்கும் அறிய வைத்தாள்

ஓசையில் உணரும் பாஷைகளை

பூமியில் என்றும் பேச வைத்தாள்

மூட‌ நிலை கொண்ட காளிதாசரை

பாடிட வைத்த கலை அரசி

அருணகிரி நாதர் திருப்புகழ் பாடிட

நாவில் அமர்ந்த எழிலரசி

ஞானசம்பந்தர் மதுர கவிபாட

ஞான நிலை தந்த கல்யாணி

ஞானசம்பந்தர் மதுர கவிபாட

ஞான நிலை தந்த கல்யாணி

ஏழு சுவரங்களும் தாள லயங்களும்

போற்றி புகழ்கின்ற கலைவாணி

ஏழு சுவரங்களும் தாள லயங்களும்

போற்றி புகழ்கின்ற கலைவாணி

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

பொங்கும் தமிழில் தேன் கவிதை

தினம் பாடிட வைத்தே கேட்டிருப்பாள்

அந்த கலைமகள் என்றும் வாழ்த்துரைப்பாள்

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாள்

கருணையில் திகழும் கலைமகளே

கலியுகம் சிறந்திட வரம் தருவாள்

நான்முகன் வலப்புறம் அமர்ந்தவளே

வாழ்வினில் உயர்ந்திட நலம் தருவாள்

கருணையில் திகழும் கலைமகளே

கலியுகம் சிறந்திட வரம் தருவாள்

நான்முகன் வலப்புறம் அமர்ந்தவளே

வாழ்வினில் உயர்ந்திட நலம் தருவாள்

வீணை ஒலி சிந்த கான மழையினை

பொழிந்திடும் எங்கள் பூமகளே

கல்வி கடலென்று உன்புகழ் பாடிட

சிந்தையில் உறையும் நாமகளே

கால வரலாறு போற்றி புகழ்பாட

தாள லயம் தந்த அருள்வேணி

கால வரலாறு போற்றி புகழ்பாட

தாள லயம் தந்த அருள்வேணி

நாங்கு கரங்களில் வேண்டும் வரங்களை

வாரி வழங்கிடும் அருள்வாணி

நாங்கு கரங்களில் வேண்டும் வரங்களை

வாரி வழங்கிடும் அருள்வாணி

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாய்

பொங்கும் தமிழில் தேன் கவிதை

தினம் பாடிட வைத்தே கேட்டிருப்பாள்

அந்த கலைமகள் என்றும் வாழ்த்துரைப்பாள்

வெள்ளை தாமரை மீதமர்ந்து

எழில் மாணிக்க வீணையை மீட்டுகிறாய்

(vellai thamarai meethamarnthu) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Saraswathi Devi Songs, சரஸ்வதி தேவி பாடல்கள், Krithis, Navarathri Special Tamil Songs Lyrics. You can also save this post வெள்ளை தாமரை மீதமர்ந்து or bookmark it. Share it with your friends…

Leave a Comment